பகுதி ஒரு பார்வை

•    பின்னணி – வரலாறு:
மதுரையை தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்ட பேறு மதுரையை சுற்றிய பகுதியில் நாயக்க வம்சத்தவர்கள் சிறப்போடு வாழ்ந்தனர். அவர்களுள் சங்கரப்பநாயக்கர் என்பவர் மதுரையிலிருந்து  ஒரு குழுவினருடன் மேற்கு நோக்கி வந்து மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரமும், மண்வளம் மிக்கதும், மாதம் மும்மாரி மொழியும் இயற்கைச் சூழல் கொண்ட இந்த இடத்தை தேர்வு செய்து குடியேறினர். அவரது பெயராலேயே இந்த இடம் சங்கரப்பபுரம் என்றிலிருந்து நாளடைவில் சங்கராபுரம் என்றாயிற்று என்பது செவி வழிச் செய்தியாகும்.